உள்ளூர் செய்திகள்

பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்த காட்சி. (அடுத்த படம்) பாதம் மற்றும் பிஸ்தா பருப்புகள் சாப்பிட்டுவிட்டு டப்பாவை காலி செய்து விட்டு சென்ற திருடர்கள்.

வீட்டின் பூட்டு உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

Published On 2023-08-01 15:32 IST   |   Update On 2023-08-01 15:32:00 IST
  • பாதாம், பிஸ்தாவை திருடி சாப்பிட்டனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகன் ராகுல் (வயது 27). இவர் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா (25).

மேனகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது மாமனார் பரந்தாமன் மற்றும் மாமியார் செல்வராணி ஆகியோரும் வீட்டை பூட்டி விட்டு மருமகளுடன் சென்றனர்.

ஊருக்கு சென்ற பரந்தாமன் மற்றும் செல்வராணி வீட்டுக்கு வந்தனர். வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

பீரோ உடைத்து அதன் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 4 கிராம் வெள்ளி பொருட்களை மரம் நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கொள்ளையர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து ஆர அமர சாப்பிட்டுவிட்டு, தோலை வீடு முழுவதும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து போரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News