உள்ளூர் செய்திகள்

பைக் மோதி 4 மாணவர்கள் படுகாயம்

Published On 2023-08-19 13:54 IST   |   Update On 2023-08-19 13:54:00 IST
  • பிளஸ்-1 படித்து வருகின்றனர்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை: 

ஜோலார்பேட்டை அடுத்த பார்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர்.

கடந்த 13-ந் தேதி தனது நண்பர்களான யோகேஸ்வரி (15), அஸ்வினி (15), நிஷாந்த் (15) ஆகியோருடன் நடந்து சென்றார்.

அப்போது பின்னால் பைக் இவர்கள் மீது மோதியது. மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News