2 தோல் தொழிற்சாலைகளுக்கு ரூ.1.80 லட்சம் அபராதம்
- 3 மாதங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும்
- அதிகாரிகள் எச்சரிக்கை
ஆலங்காயம்:
வாணியம்பாடியில் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரி கள் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கச்சேரி சாலை மற்றும் உதயேந்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை என 2 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக நிலத்திலும், பாலாற்றிலும் வெளியேற்றியது கண்டறியப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலையை மூட மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் கோபாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொ ண்டார்.
மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளுக்கு தற்போது உதயேந்திரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ள நிலத்தில் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியதற்காக ரூ.1 லட்சமும் கச்சேரி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கழிவுநீர் கால்வாயில் கழிவு நீரை வெளியேற்றியதற்காக ரூ. 80 ஆயிரமும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.