உள்ளூர் செய்திகள்
குப்பைகளை சேகரிக்க புதிய 2 வாகனங்கள்
- நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வானங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.
இந்த நிலையில் துப்புர பணியாளர்கள் குப்பைகளை விரைந்து சேகரிக்க, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த வாகனங்களை நகர மன்ற தலைவர் எம். காவியாவிக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அப்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, நகர செயலாளர் ம. அன்பழகன், நகராட்சி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.