உள்ளூர் செய்திகள்

16 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

Published On 2023-05-27 09:23 GMT   |   Update On 2023-05-27 09:23 GMT
  • நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்த போது சிக்கியது
  • அபராதம் விதித்தனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி தலைமையில் சுகாதார ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் கேசவன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்து தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் 3 கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்ததோடு ஒவ்வொரு கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News