உள்ளூர் செய்திகள்

லாரி மீது பஸ் மோதி 15 பேர் படுகாயம்

Published On 2023-08-03 09:18 GMT   |   Update On 2023-08-03 09:19 GMT
  • மாங்காய்க சிதறி கிடந்தது
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால், லாரி டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலூரில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மண்டிக்கு, லாரியில் மாங்காய்களை லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.

ஆம்பூர் நெடுஞ்சாலை யில் சென்றபோது, லாரி மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

விபத்தால் சாலை முழுவதும் மாங்காய் சிதறி கிடந்தது. அதனை பொதுமக்கள் அள்ளி சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News