சமையல் கியாஸ் மூலம் இயக்கிய 12 ஆட்டோக்கள்
- முறை கேடாக பயன்படுத்தி வாகங்கள் பறிமுதல்
- அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை
திருப்பத்தூர்:
மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்ப டுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் அவ்வப்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டோ கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக சமையல் கியாஸ் சிலிண்டர்களை முறை கேடாக பயன்படுத்தி வாகங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், வேலூர் துணை போக்குவரத்து ஆணை யர் எம் எஸ் இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் எம்.பி. காளியப்பன், ராமகி ருஷ்ணன், திருப்பத்தூர், வாணியம்பாடி, மற்றும் செயலாக்கம் (என்போர்ஸ்மேன்ட்) வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பிரதீபா தலைமையில் கூட்டுத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், விஜயகுமார், சிவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு ஆய்வு செய்ததில் அனுமதிக்கு புறம்பாக சமையல் கியாஸ் சிலிண்டர் பொருத்தி இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறு கையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை பயன்ப டுத்தி ஆட்டோ ஓட்டக்கூ டாது.
இது போன்ற ஆட்டோக்கள் கண்டறி யப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.