உள்ளூர் செய்திகள்

1-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்

Published On 2022-10-29 15:35 IST   |   Update On 2022-10-29 15:35:00 IST
  • கலெக்டர் உத்தரவு
  • உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை

திருப்பத்தூர்:

நவம்பர் மாதம் 1-ந்தேதி உள் ளாட்சிகள் தினம் கொண் டாட தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி அன்று கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிக ளிலும் வருகிற 1-ந் தேதி பகல் 11 மணிக்கு தவறாமல் கிராம சபை கூட்டப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப் பாக பணிபுரிந்த ஊ ஊழியர் களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக் கும் மகளிர் சுய உதவிக் குழுக் களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழக் கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், வடகி ழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடி யிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக் கப்பட வேண்டும்.

கிராமசபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையா ளர்களாகவும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அள வில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.

Tags:    

Similar News