உள்ளூர் செய்திகள்

விவசாயிக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-07-08 08:53 GMT   |   Update On 2023-07-08 08:53 GMT
  • ஜமுனாமரத்தூரில் நடந்த முதியவர் கொலை வழக்கில் உத்தரவு
  • திருப்பத்தூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பத்தூர்:

திருவண்ணாமலைமாவட் டம் போளூர் அடுத்த ஜமு னாமரத்தூர் மண்டப்பாறை கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 45), விவசாயி. இவருக்கும், இவரது சகோத ரர் பூச்சிக்கும் இடையே உள்ள இடத்தில் விவசாயம் செய்வதில் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பூச்சி, ஊர் பஞ்சாயத்தை கூட் டினார்.

பஞ்சாயத்தில் பூச்சிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த உறவினர் குப்பன் (60) என்பவர் பேசினார். இது பொன்னுசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 2013- ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி மீண்டும் குப்பனுக்கும், பொன்னுசாமிக்கும் இடையை வாக்குவாதம் ஏற் பட்டது. அப்போது பொன்னுசாமி, விவசாயியான அவ ரது சகோதரர் ஜெயராமன் (40), உறவினர்கள் உமேஷ், வெள்ளையன் மனைவி பூச்சி ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து குப்பனை சரமாரியாக தாக் கினர். திடீரெனஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குப்பனை வெட்டி னார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக் காக வேலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை இதுகுறித்து ஜமுனாமரத் தூர் போலீசார் வழக்குப்ப திவு செய்து. பொன்னுசாமி, ஜெயராமன், உமேஷ், பூச்சி ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.

இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசா ரணை நேற்று நடந்தது. இதில் நீதிபதி மீனாகுமாரி கத்தி யால் வெட்டிய ஜெயராம னுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பொன்னுசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும், உமேஷ், பூச்சி ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.750 அபதாரதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

நீதிபதி தீர்ப்பு வாசித்து கொண்டு இருந்த போது ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட ஜெயராமன் கோர்ட் டில் இருந்து தப்பியோட முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளா கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News