உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன பெண் ஊழியர் உள்பட 3 பெண்கள் மாயம்

Published On 2023-04-26 15:00 IST   |   Update On 2023-04-26 15:00:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.
  • கோபித்து வீட்டை வெளியே சென்றவர், பீன்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் மோனி (வயது 22). இவர் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் பின்னர் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால பதறிபோன தந்தை ஜெயசீலன் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தந்தை ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோனிைய தேடிவருகின்றனர்.

மற்ெறாரு சம்பவம்

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கலுகொண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி ரேவதி (வயது24). கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து வீட்டை ெவளியே சென்றவர், பீன்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ஹரீஷ் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன பெண் ஊழியர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மாதனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் மாதேஸ்வரி (வயது 27). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி கார்னூர் பகுதியில் ஹாஸ்டலில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக ஹாஸ்டலில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதறிப்போன அவர் பலஇடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாதேஸ்வரி மாயமானது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சின்னசாமி மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாதேஸ்வரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News