உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.


தூத்துக்குடி அங்கன்வாடி, ரேஷன் கடையில் மேயர் ஆய்வு

Published On 2022-06-14 10:16 GMT   |   Update On 2022-06-14 10:16 GMT
  • ரேஷன் கடைகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
  • உணவுப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் அரசு பள்ளி, அங்கன்வாடி, மற்றும் ரேஷன் கடைகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். செல்வநாயகபுரம் மற்றும் ஜின்பேக்டரி ரோடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கட்டிடங்களில் தரம் கழிப்பறை வசதிகள்குறித்து ஆசிரியர்களிடம் விவரம் கேட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்ற அவர் அங்கு உள்ள இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். உணவுப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

அப்போது மக்களுக்கு வழங்க தேவையான அளவில்ஆயில் இல்லாமல் குறைவாக இருந்ததால் அது குறித்து விவரம் கேட்டு கூடுதல் ஆயில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News