உள்ளூர் செய்திகள்

திருப்பூர் திருநகரில் நாளை மின்தடை

Published On 2025-09-02 17:46 IST   |   Update On 2025-09-02 17:46:00 IST
  • திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை 3ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன்,

ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர்காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2-வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமிகவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லைநகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம்,

ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், ஆர்.என்., புரம் ஒரு பகுதி, கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News