உள்ளூர் செய்திகள்

செல்போன் டவரில் இருந்த உதிரி பாகங்கள் திருட்டு

Published On 2022-07-22 15:10 IST   |   Update On 2022-07-22 15:10:00 IST
  • தனியார் செல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் ஆகியன கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி திருட்டு போனது.
  • அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே மேகநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிறுவப்பட்டு இருந்த தனியார் செல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் ஆகியன கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி திருட்டு போனது. அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

இது குறித்து செல்போன் டவர் அமைத்த சென்னையை சேர்ந்த ஜிடிஎல் என்ற தனியார் நிறுவன அதிகாரி தமிழரசன் (வயது 28) என்பவர் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், வழக்குப் பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News