உள்ளூர் செய்திகள்

அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

Published On 2022-06-21 10:07 GMT   |   Update On 2022-06-21 10:07 GMT
  • அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
  • கடந்த மாதம் 11-ந் தேதி பாலாஜி அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை:

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் பாலாஜி என்ற வெங்கடாசலம் (வயது24). இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இவர், கடந்த மாதம் 9-ந் தேதி கோவை மாநகர (தெற்கு) போலீஸ் துணை கமிஷனர் முன்னிலையில் ஆஜராகி ஒரு வருட காலத்திற்கு எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என சட்டப்பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின்படி, நன்னடைத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் அதனை மீறி மீண்டும் கடந்த மாதம் 11-ந் தேதி பாலாஜி அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நன்னடைத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி குற்ற செயலில் ஈடுபட்ட அவரை அடுத்த ஆண்டு 8-5-2023 வரை 325 நாட்கள் ஜெயிலில் அடைக்க கோவை மாநகர (தெற்கு) போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News