உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது

Published On 2023-06-20 12:01 IST   |   Update On 2023-06-20 12:01:00 IST
  • ஜெயக்குமார் கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
  • ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி, கொடுவாளால் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தை சே ர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் நடராஜன்(49) விவசாயி. சம்பவத்தன்று நடராஜனின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி கருப்பாயி, அவரது நிலத்தில் வேலை ப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜெய க்குமார்(45) கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த நடராஜன், ஜெயக்குமாரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி, கொடுவாளால் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார்.

Tags:    

Similar News