உள்ளூர் செய்திகள்

புவனகிரி அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற தொழிலாளி மாயம்

Published On 2023-02-27 14:39 IST   |   Update On 2023-02-27 14:39:00 IST
  • ரமேஷ் (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். உடல்நிலை சரியில்லை என்று ஆஸ்பத்திரக்கு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
  • அவரதுமனைவி பிரபாவதி அளித்த புகாரின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்..

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வில்லியநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதியின் கணவர் ரமேஷ் (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 23-ந்தேதி அன்று உடல்நிலை சரியில்லை என்று கூறி ஆஸ்பத்திரக்கு சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது இவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பிரபாவதி அளித்த புகாரின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News