உள்ளூர் செய்திகள்
- கூத்தையன் மனைவி பழனியம்மாள். இவரின் வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது .
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த கூத்தையன் மனைவி பழனியம்மாள். இவரின் வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது
இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.