உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி விவசாயி பலி

Published On 2023-01-05 09:09 GMT   |   Update On 2023-01-05 09:09 GMT
  • திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
  • இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.

நீடாமங்கலம்:

வலங்கைமான் கீழ விடயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 60) விவசாயி.

சம்பவத்தன்று இவர் திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.

பின்னர் நடந்து வந்தபோது இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.

இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News