உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் பரபரப்பு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் வீடு உள்பட3 இடங்களில் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2023-07-13 09:40 GMT   |   Update On 2023-07-13 09:40 GMT
  • கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
  • வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நர்கள் 10 பட்டு புடவை, வெண்கல செம்புகளை திருடி சென்றனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து இன்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே பீரோவில் இருந்து 35 பவுன் நகை மற்றும் 21 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் அளித்தார்.

இதைபோல் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் அப்பள கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டிலும் நேற்று இரவு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நர்கள் 10 பட்டு புடவை, வெண்கல செம்புகளை திருடி சென்றனர். மேலும் இந்த வீட்டின் அருகே உள்ள மேஸ்திரி லட்சுமணன் என்பவர் வீட்டிலும் 2 பவுன் தங்க நகை, வீட்டு பத்திரத்தை திருடிச் சென்றனர். மேலும் பூக்கடை வியாபரி முத்து இவரது வீட்டிலும் 15 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டி யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்ப நாயும் வரவழக்கப் பட்டு துப்புதுலக்கப்பட்டு வருகிறது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். திண்டி வனத்தில் ஒரே நாளில் அதிமுக ெசயளாலர் வீடு உள்பட 4 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி யது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News