உள்ளூர் செய்திகள்

50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

Published On 2022-12-14 09:12 GMT   |   Update On 2022-12-14 09:12 GMT
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே அஜ்ஜுர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 53). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று இரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சிவகுமார் ஓட்டினார். அரவேனு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News