உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் செய்தவர்களை படத்தில் காணலாம்.

விபத்தில் சிறுவன் பலி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-10-10 06:39 GMT   |   Update On 2022-10-10 06:39 GMT
வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கடலூர்:

விருத்தாசலம் அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் வசித்து வரும் செந்தில் -மீனா. இவர்களின் 13 வயது மகன் பிரேம்குமார். விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இவர் அவருடைய வீட்டின் எதிர்ப்புற சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். சிறுவனை அங்கிருந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் மரக்கட்டைகளை போட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News