உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2022-06-08 10:11 GMT   |   Update On 2022-06-08 10:11 GMT
  • தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் செயினை பறித்து தப்பி சென்றனர்.
  • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மங்களநாயகி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி மங்களநாயகி (வயது 51).

இவர் நேற்று இரவு தஞ்சையில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வ.உ.சி. நகரில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மங்களநாயகி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்தனர்.

அதிர்ச்சியடைந்த மங்களநாயகி திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News