உள்ளூர் செய்திகள்

கோவை ஓடந்துறை டீக்கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2023-08-17 14:47 IST   |   Update On 2023-08-17 14:47:00 IST
  • ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு
  • கடை முற்றிலும் எரிந்து நாசமானது

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் ஓடந்துறை பகுதி 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும்.

இப்பகுதியில் சாலையின் ஒரு புறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் ஓடந்துறை ராம சாமி நகர் பகுதியை சேர்ந்த சசிதரன்(60) என்பவர் சாலையோரத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றிரவு சசிதரன் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு, தனது கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரிந்தது.

அந்த சமயம் காற்றின் வேகமும் அதிகமாக இருந்த தால், தீ மளமளவென கடையின் மற்ற பகுதி களுக்கு வேகமாக பரவியது.

கடை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பார்த்து, மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையின ருக்கு தகவல் அளி த்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் கடை முற்றிலும் எரிந்து சேதமாகி விட்டது. இதில் கடையில் இருந்த பொருட்களும் எரிந்து விட்டன.

மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News