உள்ளூர் செய்திகள்

பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி.

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

Published On 2023-03-16 08:02 GMT   |   Update On 2023-03-16 08:02 GMT
  • காலபைரவருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு தயிர்சாதம்,உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி ரவிநாரயணன், சரஸ்வதி, ஈஸ்வரி செய்தனர்.

Tags:    

Similar News