உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே வாலிபர் தற்கொலை

Published On 2023-05-30 09:31 GMT   |   Update On 2023-05-30 09:31 GMT
  • மாரிமுத்து தனது மகன் லோகேஸ்வரனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்தார்.
  • மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் தற்கொலை செய்தார்.

கோவை,

கோவை நடுக்கல்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து . கூலித் தொழிலாளி. இவரது மகன் லோகேஸ்வரன் (23) . இவரும் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மாரிமுத்து மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாரிமுத்து பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதில் விரக்தி அடைந்த லோகேஸ்வரன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News