உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
ஆண்டிபட்டி அருகே வாலிபர் தற்கொலை
- வாலிபர் மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது
- வாலிபர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே ஆட்டுபாறையை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது25). இவருக்கு திருமணமாகி லத்திகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அழகுபொன்னு கடமலை க்குண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.