உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-04-02 15:01 IST   |   Update On 2023-04-02 15:01:00 IST
  • நேற்று இவரது தந்தை ஏன் குடித்துவிட்டுவந்து தினமும் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.
  • சத்யராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சத்யராஜ் (வயது23), இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இவரது தந்தை ஏன் குடித்துவிட்டுவந்து தினமும் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.

இதனால் மனவேதனையில் விரக்தி அடைந்த சத்யராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News