உள்ளூர் செய்திகள்
- அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
- மன உளைச்சலுக்கு உள்ளான கார்த்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 32). இவருக்கு அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் மன உளைச்சலுக்கு உள்ளான கார்த்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்தி இறந்தார்.
இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.