உள்ளூர் செய்திகள்

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-12-15 09:26 GMT   |   Update On 2022-12-15 09:26 GMT
  • 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
  • வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.

கோவை,

மேட்டுப்பாளையம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு அறிவொளி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் வ.உ.சி வீதி பகுதியை சேர்ந்த கல்யாண சுந்தரம் (வயது 24) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News