உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-12-24 09:20 GMT   |   Update On 2022-12-24 09:20 GMT
  • நகர பகுதியில் ரோந்து சென்றனர்.
  • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் உள்ளிட்ட போலீசார் நகர பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், கூடலூர் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (வயது 23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News