உள்ளூர் செய்திகள்

கோவையில் இளம்பெண் தற்கொலை

Published On 2022-12-22 14:30 IST   |   Update On 2022-12-22 14:30:00 IST
  • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

கோவை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கருதம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. பெயிண்டர். இவரது மகள் அபிநயா (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர் பீளமேடு அருகே உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயாவுக்கு அவரது ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதனையடுத்து அவர் கோவைக்கு வந்தார்.

இதன்காரணமாக காதலர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. மேலும் அடிக்கடி 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர் அபிநயாவுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அபிநயா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று விடுதியில் உள்ள அறையில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அபிநயாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அபிநயா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News