உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆசிரியை தற்கொலை

Published On 2022-07-14 06:14 GMT   |   Update On 2022-07-14 06:14 GMT
  • முதுநிலை பட்டதாரியான ராதிகா திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
  • ஆசிரியை தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூந்தோட்ட நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் ராதிகா (வயது26). முதுநிலை பட்டதாரியான இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த ராதிகா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News