உள்ளூர் செய்திகள்
டாஸ்மார்க் கடையை இட மாற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
- ஒசல்லி பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போசி நாயக்கனஅல்லி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
- ஒசஅல்லி, வேடியூர், போசினா யக்கனஅள்ளி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒசல்லி பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போசி நாயக்கனஅல்லி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒசஅல்லி, வேடியூர், போசினா யக்கனஅள்ளி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்த பகுதி யில் உள்ள பொது மக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் கடத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் பாதிக்கும் வகையில் தருமபுரி -கடத்தூர் மெயின் ரோட்டில் உள்ளஅரசு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் முனைவர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் பெண்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.