உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள்.

டாஸ்மாக் கடைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

Published On 2023-11-10 10:01 GMT   |   Update On 2023-11-10 10:01 GMT
  • தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.
  • கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம், ஏ. ஐ. டி.யூ .சி. டாஸ்மாக் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் துரை. மதிவாணன், முத்துக்குமரன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், தலைவர் பால. வடிவேலன், மாவட்ட பொருளாளர் இளஞ்செ ழியன், மேற்பார்வையாளர் கருணாகரன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இதை பயன்படுத்தி சமூக விரோதிகளால் டாஸ்மாக் கடைகளில் அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் அடிக்கடி வந்து கண்காணிக்க வேண்டும்.

பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News