விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
- ராசிபுரம் மெயின் ரோடு பகுதியில் முகுந்தன் கென்னடி என்பவரின் தோட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
- விவசாய தோட்டத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
சேலம்:
சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பாப்பாரப்பட்டி கிராம மக்கள் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ராசிபுரம் மெயின் ரோடு பகுதியில் முகுந்தன் கென்னடி என்பவரின் தோட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
இதை இடமாற்றம் செய்து பாப்பாரப்பட்டி ஊராட்சி ராசிபுரம் மெயின் ரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பின்புறம் உள்ள விவசாய தோட்டத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு சித்தேரி காடு, சரவென்காடு கடுகு காரன் காடு வெள்ளையா கவுண்டனூர், போயர் தெரு கூனங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாய பகுதியில் மதுபான கடை வைக்க உயர் நீதிமன்றம் தடைவித்துள்ளதாலும், இரவு நேரங்களில் பெண்கள் அதிகமாக செல்லும் பகுதி என்பதாலும் அந்த பகுதியில் அமைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.