உள்ளூர் செய்திகள்

சென்னையில் 5-ந்தேதி 'டாஸ்மாக்' கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு

Published On 2023-02-02 02:08 GMT   |   Update On 2023-02-02 02:08 GMT
  • தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

சென்னை :

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்துவிதமான 'பார்'களும் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News