உள்ளூர் செய்திகள் (District)

தஞ்சை கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று ஏகதின லட்சார்ச்சனை

Published On 2023-10-15 10:10 GMT   |   Update On 2023-10-15 10:10 GMT
  • திருப்பதி சென்று வழிபட்ட பலன்களை இங்கு பெறலாம்.
  • இன்று காலை 7 மணிக்கு உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி பெருமாளே இங்கு கலியுக வெங்கடேச பெருமா ளாகவும் சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் காட்சி தருகிறார்.

திருப்பதி சென்று வழிபட்ட பலன்களை இங்கு பெறலாம். திருப்பதி வேண்டுதல்களை இங்கு நிறைவேற்றி கொள்ளலாம்.

இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும் வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. இதில் பதினைந்து பட்டாச்சார்யார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள்

ஏகதின இலட்ச்சா ர்சனைக்கு துளசிகள் , தாமரை, மல்லிகை, மருக்கொழுந்து, சம்பங்கி உதிரிப்பூக்கள் வாங்கி தந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News