உள்ளூர் செய்திகள்

மல்லூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை

Published On 2023-10-27 03:36 GMT   |   Update On 2023-10-27 03:36 GMT
  • போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள எருமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (37). விவசாயியான இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

முத்துராஜ் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் முத்துராஜை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்டையால் முத்துராஜை சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுப்பற்றி தெரியவந்ததும் முத்துராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இது குறித்து மல்லூர் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News