உள்ளூர் செய்திகள்

கேரள எல்லையில் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: வாலிபரை கொன்று வீசிய கும்பல்-ஒருவர் கைது

Published On 2022-11-08 16:29 IST   |   Update On 2022-11-08 16:29:00 IST
  • அன்பழகன் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
  • சம்பவத்தன்றும் அன்பழகன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் ஆரியங்காவு ரெயில் நிலையத்திற்கு அருகில் ஆற்றங்கரையில் செங்கோட்டை காலங்கரையை சேர்ந்த அன்பழகன்(வயது 37) என்பவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சம்பவ இடத்திற்கு சென்று அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில், அன்பழகன் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கொலை செய்து ஆரியங்காவு பகுதியில் வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், சாத்தூர் அருகே உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ்(30) என்பவரும், அவரது கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து அன்பழகனை கைது செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட அன்பழகனின் சொந்த ஊர் சங்கரன்கோவில் என்பதும், சமீபத்தில் தான் இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அன்பழகன் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு செங்கோட்டையை அடுத்த மேலூரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சம்பவத்தன்றும் அன்பழகன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் மாயமான அவரை 4 பேர் கும்பல் காரில் கடத்தி சென்று கொலை செய்து ஆரியங்காவில் வீசி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் கள்ளக்காதல் விவகாரத்தல் அன்பழகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏற்கனவே கொலை வழக்கில் தொடர்புடைய அவரை முன்விரோதம் காரணமாக யாரேனும் தீர்த்துக்கட்டினரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News