உள்ளூர் செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்: டீசலை உடலில் ஊற்றி தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

Published On 2023-05-24 09:58 IST   |   Update On 2023-05-24 09:58:00 IST
  • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுபாஷினி குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
  • கண்இமைக்கும் நேரத்தில் சுபாஷினி உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள வையாபுரி நகரை சேர்ந்தவர் வைகுந்தன்.

இவரது மனைவி சுபாஷினி (வயது 28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. மேலும் வைகுந்தன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து சுபாஷினியிடம் தகராறு செய்து வந்தார்.

இதன் காரணமாக மனவேதனை அடைந்த அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். சுபாஷினியை அவரது உறவினர்கள் காப்பாற்றினர்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.

கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சுபாஷினியை மீட்டனர்.

பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News