உள்ளூர் செய்திகள்

வேலைக்கு செல்வதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

Published On 2023-08-31 06:42 GMT   |   Update On 2023-08-31 06:42 GMT
  • ராஜேஸ்வரி கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
  • இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 25). இவர் கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இதை கணவர் அருண்குமார் கண்டித்தார். இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார்-ராஜேஸ்வரி இடையே மீண்டும் செல்போனில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரி- அருண்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். மேலும் இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News