உள்ளூர் செய்திகள்

கண்டமனூரில் தொழிலாளியை கொன்று நாடகமாடிய மனைவி, மகன்கள் கைது

Published On 2023-07-03 04:08 GMT   |   Update On 2023-07-03 04:08 GMT
  • பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
  • பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

வருசநாடு:

தேனி மாவட்டம் கண்டமனூர் கணேசபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி போதுமணி (40). இவர்களுக்கு சூர்யா (24), சுகன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது வீட்டிலேயே இறந்து கிடந்தார்.

இதுகுறித்து சித்தாபட்டி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போதுமணி மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News