பள்ளிபாளையத்தில் வீசிய சூறாவளி காற்றில் செங்கல் சூளை புகை கூண்டு விழுந்து தொழிலாளி பலி
- சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
- பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுவுடன் மழை பெய்தது.
இந்த சூறாவளி காற்றில் செங்கல் சூளையின் புகை கூண்டு திடீரென உடைந்து விழுந்தது. அப்போது சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் (55) என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
ஆபத்தான நிலையில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மேலும் பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.