திருவள்ளூரில் பெண்ணிடம் நூதன முறையில் நகை கொள்ளை- வாலிபர்கள் துணிகரம்
- சுலோச்சனா தான் அணிந்து இருந்த 11 சவரன் செயினை கழற்றி மணிபர்சில் வைத்தார்.
- திடீரென மர்மநபர்கள் சுலோச்சனாவிடம் இருந்த பர்சை பறித்து சென்று விட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி சுலோச்சனா. இவர் தாம்பரத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டு பஸ் மூலம் மணவாளநகர் வந்து இறங்கினார். பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்மநபர்களில் ஒருவன் சுலோச்சனாவிடம் பேச்சுக் கொடுத்தார். செல்லும் போது செயினை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதையடுத்து சுலோச்சனா தான் அணிந்து இருந்த 11 சவரன் செயினை கழற்றி மணிபர்சில் வைத்தார். அப்போது திடீரென மர்மநபர்கள் சுலோச்சனாவிடம் இருந்த பர்சை பறித்து சென்று விட்டனர். இது குறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.