உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலி

Published On 2022-06-23 09:30 GMT   |   Update On 2022-06-23 09:30 GMT
  • உடல் முழுவதும் பரவிய தீயால் தேவகி அலறி துடித்தார்.
  • அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த திருவெங்கடபுரத்தை சேர்ந்தவர் தேவகி(60). இவர் கடந்த 12-ந்தேதி குளிப்பதற்காக விறகு அடுப்பில் வெந்நீர் வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தேவகியின் சேலையில் தீப்பிடித்தது.

இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக பொன்னேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News