உள்ளூர் செய்திகள்

தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்ற விஜய் வசந்த்

Published On 2024-01-27 14:17 IST   |   Update On 2024-01-27 14:17:00 IST
  • தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
  • மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது. தொகுதி ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News