உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு நலம் பெற வேண்டும்- வைகோ

Published On 2022-07-13 04:34 GMT   |   Update On 2022-07-13 04:34 GMT
  • தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மு.க.ஸ்டாலின் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும்.
  • மு.க.ஸ்டாலின் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுக்கிறார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு நலம் பெற வேண்டும். அவர் முதல்-அமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். வாரத்தில் ஒரு நாளாவது அவர் ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அவர் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும். அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுக்கிறார்.

அவருடைய உடல் நலத்தை மனதில் கருதி, திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள் அவரது உழைப்பை நாட்டுக்காக பயன்படுத்தும் வேளையில் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்துவிடக் கூடாது. அவர் விரைவில் முழு நலம் பெற்று தமிழகத்திற்கு பணியாற்ற இயற்கையை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News