உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே டிராக்டரில் சிக்கி வாலிபர் பலி

Published On 2022-10-05 08:53 GMT   |   Update On 2022-10-05 08:53 GMT
  • டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய ஓசூர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • கிருஷ்ண காந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

திருத்தணி:

பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜா பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஓசூர்(வயது28). கிருஷ்ண காந்த் (27). இருவரும் மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டு நோக்கி சென்றனர். திருத்தணி அடுத்த வி.கே.என். கண்டிகை அருகே வளைவில் திரும்பிய போது அவ்வழியே கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய ஓசூர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ண காந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News