உள்ளூர் செய்திகள்

திரு.வி.க நகர் அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

Published On 2023-06-26 06:44 GMT   |   Update On 2023-06-26 06:44 GMT
  • வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை திரு.வி.க நகர், கென்னடி ஸ்கொயர், முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது27). எலக்ட்ரீசியன். மனைவி பிரிந்து சென்ற நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News