உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் ஏ.சி.யில் மின் கசிவால் வீட்டில் தீ: இளம்பெண்-2 குழந்தைகள் உயிர் தப்பினர்

Published On 2023-06-26 05:15 GMT   |   Update On 2023-06-26 05:15 GMT
  • படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது.
  • விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 31).

இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது வேலைகளை முடித்துவிட்டு தனது மகன்கள் ஸ்ரீ பிரணவ்(11),ஸ்ரீ ஆரவ்(4) ஆகியோருடன் படுக்கை அறையில் உறங்கி விட்டார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் படுக்கை அறையில் இருந்த ஏ.சி.யில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தார். அப்போது படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது. பின்னர் அவர் படுத்திருந்த கட்டிலுக்கும் தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

மேலும் இது குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் தெர்மல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் ரவிக்குமார் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் விஜயலட்சுமி வீட்டில் படுக்கை அறையில் பற்றிய தீ சமையலறை வரை பரவி எரிந்தது. அதனை மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு உடனடியாக அணைத்தனர். சாமர்த்தியமாக செயல்பட்டதால் விஜயலட்சுமியை தனது குழந்கதைளையும் தன்னையும் காப்பாற்றிக் கொண்டார்.

விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த தெர்மல் நகர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும், போலீசாருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News